Monday, November 5, 2012

தாண்டவம்









 ஆனந்த தாண்டவம் --குற்றாலம்,சிதம்பரம்






காளிகா தாண்டவம் --திருநெல்வேலி .














 சந்தியா தாண்டவம்---மதுரை.



ஊர்த்துவ தாண்டவம் --திருவலங்காடு.








கஜசம்ஹாத் தாண்டவம்--திருச்செங்காட்டங்குடி





Sunday, November 4, 2012

ஆன்மீகத்தில் அடக்கம் தேவை !!


அடக்கம் அமரருள் உயிக்கும்  - திருவள்ளுவர்.
 
வள்ளுவ பெருந்தகை அடக்கமாக இருந்தால் இறவாநிலைக்கு அழைத்து செல்லும் என்று சொல்லுகிறார்.

நமது ஞானிகள் எவ்வளவு அடக்கமாக இருந்தார் என்று பாடல்கள் பார்த்தல் நமக்கு புரியும்.

வள்ளல் பெருமான்:
  நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் 
  ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி;
   
 தீமை எலாம்   நன்மை என்றே  திருஉளங் கொண் டருளிச் 
 சிறியேனுக் அருளமுதத் தெள வளித்த



  கடியரில் கடியேன் கடையரில் கடையேன்
  கள்வரில் கள்வனேன்

என்று சொல்லுகிறார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் 

 நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா
அருள் பெற்றேன்!!


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

மாணிக்க வாசகர்

 நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

  பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
           புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
        செமமையே ஆய சிவபதம் அளித்த
           செல்வமே சிவபெரு மானே


 அபிராமி பட்டர்

 நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

 நாயேன்   என்றும் பேயேன் என்றும் சொல்லுகிறார்

 

 

Sunday, October 21, 2012

Jeeva samadhi

Jeeva samadhi around chennai



               


Salem jeeva samadhi

Thursday, October 18, 2012

தன்னை அறிந்து இன்பமுற


தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலவே - வள்ளல் பெருமான்

உடல், மனம்  -  இது அனைத்துமே நாம் உருவாகியது,  நாம் என்பது உயிர். அதை உணரமாலே  வாழ்கிறோம். அதன் இயல்பு தெரியாமல் வாழ்கிறோம். நாம் யார் மற்றவர் யார் என்று தெரியாமல் வாழ்கிறோம். இது ஒரு வாழ்வா? உடலை மனதை மற்றவர் என்று நினைத்து வாழ்கிறோம்.

நம்மை எப்படி அறிவது?

'சத்தியஞான சபையை என்னுள் கண்டேன்' என்று வள்ளல் பெருமான் சொல்கிறார்.  அது எப்படி?

நம்மை அறிய தடை என்ன? அதை எப்படி விளக்குவது? நம் மனதை எங்கு வைத்தால் சும்மா இருக்கும்?

திருவடி-மெய்பொருள் என்பது என்ன? அது நம்முள் எங்கு உள்ளது?

நம்மை அறிய குரு எப்படி உதவி புரிகிறார்? குருவின் பங்கு என்ன? வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?


Sunday, July 15, 2012

இராமதேவர் - பூஜாவிதி


ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1
போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்கவேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2
முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசையிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3
சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும்சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே.

Saturday, July 14, 2012

காலம் இனியில்லை


யாத்திரைப் பத்து


புகவே வேண்டா புலன்களில்நீர் !!
புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் 

மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்

விடுமின் வெகுளி வேட்கைநோய் 
மிகவோர் காலம் இனியில்லை 


அச்சப்பத்து 




 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்

வள்ளலார் கண்ணொளி பற்றி பாடிய பாடல்கள்

கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
கண்டு கலந்து களிக்கு மருந்து  -  நல்ல மருந்து 

ஏதம் அகற்றும் என் அரசே என் ஆருயிரே என்அறிவே
என்கண் ஒளியே என்பொருளே என் சற்குருவே என்தாயே  -
செல்வச் சீர்த்தி மாலை


கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே-
மகாதேவ மாலை 

கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே - .சற்குருமணி மாலை 



மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்க ஒளி மேவுகண்கள் - தெய்வமணி மாலை 



கண்ணே அக்கண்ணின் மணியே மணியில் கலந்தொளி செய்
விண்ணே வியன்ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
 பெண்ணே மலைபெறும் பெண்மணியே தெய்வப் பெண்ணமுதே
- வடிவுடை மாணிக்க மாலை 

கண்ணேஎன் இருகண் இலங்குமணியே என்உயிரே
என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே -- .திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்