Monday, March 4, 2013

கடவுளை மட்டும் பேசி என்ன பயன்?

அன்புள்ள ஆன்மீகவாதியே கடவுளை மட்டும் பேசி என்ன பயன். முதலில் நீங்கள் யார் என்று தெரியுமா? உயிரின் சக்தியை சிந்தனை செய்தது உண்டா? உயிர் எங்கு இருந்து வந்தது? அதன் தன்மை என்ன? அதை ஏன் நம்மால் காண முடியவில்லை?. உயிரை கண்டால் மட்டுமே, நாம் வந்த இடத்துக்கு செல்ல முடியும். 

மனதை பண்படுத்தும் விஷயங்கள் உயிரை அறிய உதவாது. உயிரை காண உள்ள தடையை அழித்தால் மட்டுமே முடியும். நமக்கு இருக்கும் அறிவால் அதை செய்ய முடியுமா? எப்படி ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ஆசிரியரை கேட்கிறோமே? அது போலே உயிரை கண்டவர்களை அணுகி கேட்பது தானே முறை. அவர் தான் குரு. உயிரை கண்ட பிறகு தான் நான் யார் என்று தெரியும். பிறகு இறைவனை காண வேண்டும். 

உயிரை காண மனம் ஒரு தடை. மனம் கர்ம வினை/பாவ மூட்டை இருக்கும் வரை இயங்கும். தடையை நீக்க வேண்டும். மனத்தால் உயிரை அறிய முடியாது. உயிரை அறிய சும்மா இருக்க வேண்டும். மனதை சும்மா இருக்க செய்ய வேண்டும். மனம் சும்மா இருக்குமா? அதை திருவடியில் வைத்து சும்மா இருக்க வேண்டும் . திருவடியில் எவ்வளவு நேரம் சும்மா இருக்கும். திருவடியில் சும்மா இருக்க குருவிடம் திருவடி தீட்சை பெறுங்கள். இங்கு தான் குருவின் துணை தேவை.திருவடி தவம் செய்ய செய்ய உயிர் தரிசனம் கிடைக்கும். பிறகு இறைவன் தரிசனம். 
தீட்சை பெற http://sagakalvi.blogspot.in/2011/10/self-realization.html

பலியா?

“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.

“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்

பழமையான உணவு

சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.

நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.

இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார்.

இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.

Monday, November 5, 2012

தாண்டவம்









 ஆனந்த தாண்டவம் --குற்றாலம்,சிதம்பரம்






காளிகா தாண்டவம் --திருநெல்வேலி .














 சந்தியா தாண்டவம்---மதுரை.



ஊர்த்துவ தாண்டவம் --திருவலங்காடு.








கஜசம்ஹாத் தாண்டவம்--திருச்செங்காட்டங்குடி





Sunday, November 4, 2012

ஆன்மீகத்தில் அடக்கம் தேவை !!


அடக்கம் அமரருள் உயிக்கும்  - திருவள்ளுவர்.
 
வள்ளுவ பெருந்தகை அடக்கமாக இருந்தால் இறவாநிலைக்கு அழைத்து செல்லும் என்று சொல்லுகிறார்.

நமது ஞானிகள் எவ்வளவு அடக்கமாக இருந்தார் என்று பாடல்கள் பார்த்தல் நமக்கு புரியும்.

வள்ளல் பெருமான்:
  நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் 
  ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி;
   
 தீமை எலாம்   நன்மை என்றே  திருஉளங் கொண் டருளிச் 
 சிறியேனுக் அருளமுதத் தெள வளித்த



  கடியரில் கடியேன் கடையரில் கடையேன்
  கள்வரில் கள்வனேன்

என்று சொல்லுகிறார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் 

 நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா
அருள் பெற்றேன்!!


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

மாணிக்க வாசகர்

 நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

  பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
           புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
        செமமையே ஆய சிவபதம் அளித்த
           செல்வமே சிவபெரு மானே


 அபிராமி பட்டர்

 நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

 நாயேன்   என்றும் பேயேன் என்றும் சொல்லுகிறார்

 

 

Sunday, October 21, 2012

Jeeva samadhi

Jeeva samadhi around chennai



               


Salem jeeva samadhi

Thursday, October 18, 2012

தன்னை அறிந்து இன்பமுற


தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலவே - வள்ளல் பெருமான்

உடல், மனம்  -  இது அனைத்துமே நாம் உருவாகியது,  நாம் என்பது உயிர். அதை உணரமாலே  வாழ்கிறோம். அதன் இயல்பு தெரியாமல் வாழ்கிறோம். நாம் யார் மற்றவர் யார் என்று தெரியாமல் வாழ்கிறோம். இது ஒரு வாழ்வா? உடலை மனதை மற்றவர் என்று நினைத்து வாழ்கிறோம்.

நம்மை எப்படி அறிவது?

'சத்தியஞான சபையை என்னுள் கண்டேன்' என்று வள்ளல் பெருமான் சொல்கிறார்.  அது எப்படி?

நம்மை அறிய தடை என்ன? அதை எப்படி விளக்குவது? நம் மனதை எங்கு வைத்தால் சும்மா இருக்கும்?

திருவடி-மெய்பொருள் என்பது என்ன? அது நம்முள் எங்கு உள்ளது?

நம்மை அறிய குரு எப்படி உதவி புரிகிறார்? குருவின் பங்கு என்ன? வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?