Monday, July 22, 2013

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார்

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார் இறைவனை அடைந்தார் என சொல்லும் பாடல். தவறு இருந்தால் மன்னிக்கவும். இது எனக்கு புரிந்தது மற்றும் அனுபவ பெற்றவர்கள் உதவியுடன் எழுதியது
ஜோதி மலை என்பது - உட்புகு வாசல் . திருவடி
வீதி - மயிர் பாலம்
1008 இதழ் தாமரை அனுபவம்
பத்தாவது வாசல் திறந்து(தலை உச்சி) மேல் சென்று
சத்தர்கள் சத்திகள் காண்கிறார்
பிறகு ஐவரை காண்கிறார்
பிறகு தாயை கண்டு அருள்/அமுதம் பெற்ற பின்னரே தந்தையை காண்கிறார்
நடராஜர் சந்நிதி - அருட்பெருஞ்சோதி காண்கிறார்

ஆணிப்(?) பொன்(தங்க) அம்பல(கோயில்) கண்ட காட்சிகள்:
1. ஜோதி மலை (
2 ஒரு வீதி - வீதியில் சென்றேன்
3 வீதி நடு ஒரு மேடை (மேடைமேல் ஏறினேன்)
4. அங்கொரு கூடம்
5 கூடமேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி
6 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆக வந் தார்கள டி
7 மணிமுடி கண்டேன டி
8 மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
9 கொடுமுடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில்
(1008 petal lotus - brain - you can see in any temple)
10 கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது
சென்றன டி(10 th gate)
11 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடிய டி
12 அப்பாலே சென்றேன் அங்கோர் திரு வாயிலில் ஐவர் இருந்தாரடி
(படைத்தல்-காத்தல்-அழித்தல் -மாயையில் மறைத்தல்-அருளல்)
13 மேலோர் மணிவாயில் உற்றேன டி
14 எண்ணும் அவ்வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - (அர்த்தனரீஸ்வரர்)

15 அத்திருவாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாள டி

16 அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும்
உண்டேன டி - சித்தர்கள் போற்றும் வாலை .. ஆதி சக்தி )

17 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி
இதை தான் (வாலை) தாயின் அருள் இல்லாமல் தந்தையை காண
முடியாது என சொல்வது.

18 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறது சாமி அறிவாரடி

http://thiruarutpa.vallalar.org/LyricsPage.aspx?pathigamid=6109

Sunday, June 23, 2013

letter to tamil sangam


வணக்கம் 

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும்.  தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம். 
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது.  எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது 

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், ....  இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல்  அனுப்புகிறேன். 

இதை தான் ஞானிகளும்  சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை. 

 திரு அருட்பிரகாஷ வள்ளலார்  அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம். 

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும். 

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. 
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி. 

லிங்க்ஐ படியுங்க. 



blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in


Thursday, April 4, 2013

சபை ஐந்து



  •  



திருவாலங்காடு                               _இரத்தின  சபை
தில்லை                                               _ பொற் சபை
மதுரை                                                 _ வெள்ளி சபை
திரு நெல்வேலி                                _ தாமிர சபை
திருக்குற்றாலம்                              _ சித்திர சபை


சிதம்பரம் – கனகசபை (ஆகாயம்) (பொன்)
திருவாலங்காடு – ரத்தின சபை (ரத்தினம்) 
திருக்குற்றாலம் – சித்திர சபை (கலை)
திருநெல்வேலி – தாமிரசபை (செப்பு)
மதுரை – ரஜத சபை (வெள்ளி)


 “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், 

ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.

திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது.


வெள்ளி அம்பலம் ::
உள்பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள பாதையில் நுழைகிறோம். அதே வழியில் கடம்பத்தடி மண்டபமும், வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபமும் இருக்கிறது. இங்கு நடராஜர் சிலை ஒன்று உள்ளது. அவர் சபாபதி என்று அழைக்கப்படுகிறார். அந்தச் சிலை வெள்ளியினால் செய்யப்பட்டது. எனவே வெள்ளியில் அம்பலத்தான் இருக்கும் இடம் வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் சிவபெருமான் நடனம் புரியும் இடங்களில் மதுரை ஐந்தில் ஒன்றாகும். சுவாமி சன்னதியில் உள்ள நடராஜர் கருவரை, வெள்ளி சபை என்று அழைக்கப்படுகிறது. இது தவிற, சிதம்பரத்தில் கனகசபை, திருவாலங்காட்டில் ரத்னசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய இடங்கள் சிவனின் நடன சபைகளாகும்.




9429) பஞ்ச சபைகள் எவை?
ரத்தின சபை, கனகசபை, ரஜிதசபை, தாமிரா சபை, சித்திரசபை
9430) ரத்தின சபை எங்குள்ளது? திருவாலங்காடு
9431) கனகசபை எங்குள்ளது? சிதம்பரம்
9432) ரஜிதசபை எங்குள்ளது? மதுரை
9433) சித்திர சபை எங்குள்ளது? திருக்குற்றாலம்
9434) வெள்ளிசபை என்று அழைப்பது எந்த சபையை? ரஜித சபையை
9435) பஞ்ச தாண்டவங்களும் எவை?ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம்
9436) ஆனந்த தாண்டவ தலம் எது? சிதம்பரம் பேரூர்
9437) அஜபா தாண்டவ தலம் எது? திருவாரூர்
9438) சுந்தரத் தாண்டவம் தலம் எது? மதுரை
9439) ஊர்த்துவ தாண்டவ தலம் எது? அவிநாசி
9440) பிரம்ம தாண்டவ தலம் எது? திருமுருகன்பூண்.
9441) தில்லையில் உள்ள ஐந்து சபைகளும் எவை? சித்சபை, கனகசபை, தேவசபை, திருத்த சபை, ராஜசபை
9442) அருவம் என்பது என்ன? உருவமற்ற நிலை
9443) உருவம் என்பது என்ன? கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை
9444) அருவுருவம் என்பது என்ன? உருவமும் அருவமும் கலந்த நிலை
9445) அருவம், உருவம், அருவுருவம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக விளங்குவது எது? சிதம்பரம்
9446) உதயத்திற்கு முன் தினமும் நடைபெறும் பூஜை எது?நித்தியபூஜை
9447) விசேட கால பூஜை எது? நைமித்தி பூஜை



திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ நடராஜரைக் காணலாம்.

திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது.



வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப்
படுகிறது.இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத்
தாண்டவம் எனவும் அழைக்கப் படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்"








Thursday, March 21, 2013

தச நாடிகள்

தச நாடிகள்(10)
1. இடைகலை - (இடப்பக்க நரம்பு)
2. பிங்கலை - (வலப்பக்க நரம்பு)
3. சுமுழுனை - (நடுநரம்பு)
4. சிகுவை - (உள்நாக்கு நரம்பு)
5. புருடன் - (வலக்கண் நரம்பு)
6. காந்தாரி - (இடக்கண் நரம்பு)
7. அத்தி - ( வலச்செவி நரம்பு)
8. அலம்புடை - (இடச்செவி நரம்பு)
9. சங்கினி - (கருவாய் நரம்பு)
10. குகு - (மலவாய் நரம்பு)

Thursday, March 14, 2013

foot_soaking

http://www.sahajayoga.ca/Meditation/foot_soaking.htm


  • Meditate for 10 to 15 minutes.
  • You can say some affirmations to cleanse the chakras.
  • Rinse and dry your feet.
  • Flush the water down the toilet. Try not to look directly in the bucket before flushing.
  • Don’t use the foot-soak bucket for any other purpose. 
When the day is over (also anytime), relax by soaking your feet in salt water while meditating. This technique relieves the body of stress and allows for a peaceful and relaxed night's rest.Sit comfortably in a chair with your hands out on our lap, facing Shri Mataji’s photograph. Place your feet in a basin or bucket of luke warm water containing a handful of salt.

Friday, March 8, 2013

திருமந்திரத்தில் சன்மார்க்கம்


திருமந்திரத்தில்  சன்மார்க்கம் என்று ஒரு அதிகாரம் உள்ளது. அது சித்தர் மார்க்கம் என்றும் சொல்கிறது. அதில் இருந்து சில பாடல்கள். இந்த சன்மார்க்கத்தை நடத்துவது வள்ளல் பெருமான்.

ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத்தோர்க்குத்
தரும் முத்தி சார் பூட்டும் சன்மார்க்கந் தானே.

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவ மாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

சன்மார்க்க சாதனந்தான் ஞானம் ஞேயமாம்
பின் மார்க்க சாதனம் பேதையதாய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தான் அவனாகும் சன்மார்க்கமே.


சன்மார்க்கம் எய்த வரும் அருஞ்சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆன சன் மார்க்கமே.

மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம் சன்மார்க்க மெனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கம்  அது சித்த யோகமே.

கற்பூரவள்ளி



கற்பூரவள்ளி:-

வேறு பெயர்: ஓம வள்ளி


.
தாவர பெயர் Coleus Aromaticus.
Karpooravalli in Tamil
Pan-Ova in Marathi.
via http://www.facebook.com/aadhi.bagavan.1

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .

பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட ,கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்