அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
- அவர் உரை மனம் கடந்து உள்ளார்.
- நம் உயிருக்கு உயிரானவர்.
- சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாக உள்ளார்.
- கற்பனை முழுவதுங் கடந்து ஒளி தரும் ஓர் அற்புதச் சிற்சபை.
- நம்மை இன்ற நற் தாயினும் இனிய பெருந்தயவு உள்ளவர்.
- சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம்.
- தநு கரணாதிகள்(மனம் சித்தம் அகங்காரம் புத்தி) கடந்து அறியும் ஓர் அனுபவம்.
- வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்குபவர்.
- மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிப்பவர்.
- எங்கு எங்கு இருந்து உயிரெ எது வேண்டினும் அங்க அங்கு இருந்து அருள்பவர்.
- பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய் திகழ்வது
- சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியியில் உணர்த்தியவர்
- காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரிபவர்
- மூவகை சித்தி அளிப்பவர்; கரும சித்தி யோகா சித்தி ஞான சித்தி
No comments:
Post a Comment