முஃமின்களே! நீங்கள்
தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக)
உங்கள் முகங்களையும்,முழங்கைகள்
வரை
உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;.
உங்களுடைய தலைகளை
(ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;.
உங்கள் கால்களை இரு
கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) -
நீங்கள் பெருந்தொடக்குடையோராக
(குளிக்கக் கடமைப் பட்டோராக)
இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும்
சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;.
தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது
பிரயாணத்திலோ இருந்தால்,
அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து
வந்தாலும், அல்லது நீங்கள்
பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும்
(உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால்
(தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால்
தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக்
கொள்ளுங்கள்;.
அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க
விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள்
அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது
முழுமையாக்கவும் விரும்புகிறான்.
No comments:
Post a Comment