Sunday, December 29, 2013

I am free.


There is something basic in our life.. but we miss/ignore...

MY TASK IS COMPLETE

My purpose is achieved.
The entire circle of birth and death is over.
I have realized the perfect bliss of the atman.
I have known myself to be Brahman.
I am free.
I am perfect.
I am independent.
I enjoy bliss.
I enjoy the bliss of the immortal soul.
I am brimful of perennial joy.
A self-effulgent light burns in my heart.
I have broken all illusory relationships.
Now there is no husband, no wife.
Now there is no cousin and no grandfather.
It is all one homogeneous essence of bliss only.

Now my task is complete.
I am free from doubt.
I am free from delusion.
Why should I study the scriptures?
I rest in my own essential nature.
Now, where is the necessity for meditation?
I act like any other human being.
I bathe, I sleep, I sing, I work, I write, I walk, I eat and I talk. And yet, I do not perform any action at all.

swami sivananda

True life is made up of ‘now’. True life is not made up of bygone yesterdays or uncertain tomorrows. If you make this moment all that it ought to be, it will bring something improved the next moment.

- Swami Chidananda

Sunday, December 8, 2013

சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி

சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி
> காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத்தலமாக சென்னிமலை அமைத்துள்ளது ..இங்கு முருகப்பெருமான் கருணையே வடிவாய் அருள்பாலிக்கிறார் .
> இக்கோவிலில் தான் சிறப்பாக தெய்வத்திரு பாலதேவராயனால் கந்த சஷ்டி கவசம் எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டது ..மூல கருவறையில் முருக பெருமான் அருள் செய்ய அவர் பின்புறம் தனி சன்னதி கொண்டு வள்ளி தெய்வானை காட்சி தருகிறார்கள் ..
> அதற்கும் சற்று மேலே 18 சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் ஜீவசமாதி கொண்டுள்ளார் இங்கே இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது ..( பிண்ணாக்கீசர்-பின் நாக்கு -பிளவு பட்ட நாக்கு -பிளவு பட்ட நாக்கினால் யோக சித்தி பெற்றவர் )
> இங்கிருத்து பழனி வரை செல்லும் சுரங்க பாதை ஒன்று உள்ளது..காண கண் கோடி வேண்டும் ..ஒரு முறை சென்று வாருங்கள்
 
> பிண்ணாக்கீசர் ஜீவ சமாதிக்கு அருகே சரவணமுனிவர் எனும் முனிவரின் சமாதியும் உள்ளது ..இயற்கை மலை அழகு காண காண மனதில் மகிழ்ச்சியும் , அருமையான தெய்வீக அனுபவங்களைப் பெறலாம் ..ஒருமுறை வந்து பாருங்கள் ...

Saturday, November 30, 2013

பூசணி விதை பாயசம்

பூசணி விதை பாயசம்!
தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -’ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.

உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன. 


தாது விருத்தி தரும்
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.

Friday, November 22, 2013

சாமி சண்முகானந்தா

உனது வாழ்வில் எக்காரணம் கொண்டு சந்தேகம் இல்லாமல் வாழலாம்.
குரு அருள்...தங்க ஜோதி ஞான சபை சிவ செல்வராஜ் உனது பரமாத்ம குரு

ஆன்மாவை நம்பினால் சரீரம் நன்றாக இருக்கும்

சரீத்தை நம்பாதே அழியும் சரீரம். அதற்காக ஆசை பட்டு எக்காரணம் கொண்டும் சாப்பிடவேண்டாம் அழிவில்லா ஆன்மாவை தேடு

ஒருவர் மௌனம் இருவர் பேச்சு மூவர் கலகம் நால்வர் நாசம்.
உங்கள் வாழ்வில் நீயும் உன்னை சார்ந்தவரும் சுத்த சன்மார்க்கத்தில் வந்து விட்டீர்கள்.

கவலை வேண்டாம் .

- சாமி சண்முகானந்தா
ஸ்ரீ ரமண அருள் ஞான சன்மார்க்க பீடம்.
சுத்த சன்மார்க்க மௌன குடில்
NO 128 செங்கம் மெயின் ரோடு
திருவண்ணாமலை

வயசு 82
இறைவன் திருவடி அடையும் நாள் 20/4/2015
மதியம் 2 மணி 43 நிமிடம்/

Thursday, August 1, 2013

Thiruvadi davam - Hindi

अरुट- पेरुन-जोती अरुट-पेरुन-जोती                        तनी पेरुम करुनै अरुट-पेरुन-जोती 

भगवान एक है, यह  संसार का केवल एक ही परमेश्वर है!

ईश्वर सृजन  के  लिए ब्रम्हा ,  रखरखाव  के  लिए विष्णु  एवं  विनाश के लिए शिव के  रूप में जाने  जाते है !

भगवान दिव्य (अललोकीक )प्रकाश के रूप में हर सिद्ध और संतों के समक्ष प्रकट होते हैं !

वदलुर रामालिंगा  वल्ललार ने अरुत्पेरुन्ज्योठी (भगवान की  कृपादृष्टि के रूप में इसे बताया है! 

भगवान हम में  आत्मा /  दिव्य प्रकाश के रूप में मौजूद है
!
हमारे जीवन का  उद्देश्य को  खुदको (आत्मा ) पाना  है!

भगवान के पवित्र चरणों (आत्मा के लिए) का प्रवेश बिंदु आँखों की पुतली है! 

कर्म के कारण हम स्वयं (आत्मा) का एहसास करने में सक्षम नहीं हैं!

हम पिता / माता / शिक्षक / किताबों / दोस्तों  से जीवन की मूलभूत ज्ञान  सीखते हैं! 

उसी तरह अध्यात्मिक ज्ञान क लिए हमे किसी सिद्ध व्यक्ति की जरूरत  होती है वो हमें गुरु के रूप में मिलते हैं! तपस्या  हमें खुली आंखो  से करना चाहिए!

मोक्ष की प्राप्ति  भौतिक घ्यान से नहीं अपितु भगवन के  समर्पण भाव अर्थात पवित्र चरणों (आँखों की पुतली) से मिलती है  और यही तपस्या है!

गुरु से दीक्षा , आशीर्वाद एवं तपस्या  से कर्मभाव पवित्र  हो जाते हैं 7200  नाडी एवं 1008  कमल पत्ती खिल कर पवित्र हो जायेंगे

अमुत्य को वा
लै  (सभी आत्माओं की मां) की कृपादृष्टि से प्राप्त किया जा सकता है । 

प्रबोधन(मुक्ति/ मोक्ष )  पाने के लिए सभी सिद्ध और संतो  ने तपस्या(थिरुवडी दवम का मार्ग अपनाया  है!

अनुशासन: मांस ,शराब एवं धूम्रपान का त्याग से ही इस प्रबोधन को पाया जा सकता है !

तांगा जोती ज्ञान  सबै - कन्‍याकुमारी                           तमिलनाडु इंडिया 

Monday, July 22, 2013

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார்

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார் இறைவனை அடைந்தார் என சொல்லும் பாடல். தவறு இருந்தால் மன்னிக்கவும். இது எனக்கு புரிந்தது மற்றும் அனுபவ பெற்றவர்கள் உதவியுடன் எழுதியது
ஜோதி மலை என்பது - உட்புகு வாசல் . திருவடி
வீதி - மயிர் பாலம்
1008 இதழ் தாமரை அனுபவம்
பத்தாவது வாசல் திறந்து(தலை உச்சி) மேல் சென்று
சத்தர்கள் சத்திகள் காண்கிறார்
பிறகு ஐவரை காண்கிறார்
பிறகு தாயை கண்டு அருள்/அமுதம் பெற்ற பின்னரே தந்தையை காண்கிறார்
நடராஜர் சந்நிதி - அருட்பெருஞ்சோதி காண்கிறார்

ஆணிப்(?) பொன்(தங்க) அம்பல(கோயில்) கண்ட காட்சிகள்:
1. ஜோதி மலை (
2 ஒரு வீதி - வீதியில் சென்றேன்
3 வீதி நடு ஒரு மேடை (மேடைமேல் ஏறினேன்)
4. அங்கொரு கூடம்
5 கூடமேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி
6 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆக வந் தார்கள டி
7 மணிமுடி கண்டேன டி
8 மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
9 கொடுமுடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில்
(1008 petal lotus - brain - you can see in any temple)
10 கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது
சென்றன டி(10 th gate)
11 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடிய டி
12 அப்பாலே சென்றேன் அங்கோர் திரு வாயிலில் ஐவர் இருந்தாரடி
(படைத்தல்-காத்தல்-அழித்தல் -மாயையில் மறைத்தல்-அருளல்)
13 மேலோர் மணிவாயில் உற்றேன டி
14 எண்ணும் அவ்வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - (அர்த்தனரீஸ்வரர்)

15 அத்திருவாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாள டி

16 அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும்
உண்டேன டி - சித்தர்கள் போற்றும் வாலை .. ஆதி சக்தி )

17 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி
இதை தான் (வாலை) தாயின் அருள் இல்லாமல் தந்தையை காண
முடியாது என சொல்வது.

18 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறது சாமி அறிவாரடி

http://thiruarutpa.vallalar.org/LyricsPage.aspx?pathigamid=6109

Sunday, June 23, 2013

letter to tamil sangam


வணக்கம் 

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும்.  தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம். 
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது.  எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது 

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், ....  இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல்  அனுப்புகிறேன். 

இதை தான் ஞானிகளும்  சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை. 

 திரு அருட்பிரகாஷ வள்ளலார்  அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம். 

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும். 

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. 
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி. 

லிங்க்ஐ படியுங்க. 



blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in


Thursday, April 4, 2013

சபை ஐந்து



  •  



திருவாலங்காடு                               _இரத்தின  சபை
தில்லை                                               _ பொற் சபை
மதுரை                                                 _ வெள்ளி சபை
திரு நெல்வேலி                                _ தாமிர சபை
திருக்குற்றாலம்                              _ சித்திர சபை


சிதம்பரம் – கனகசபை (ஆகாயம்) (பொன்)
திருவாலங்காடு – ரத்தின சபை (ரத்தினம்) 
திருக்குற்றாலம் – சித்திர சபை (கலை)
திருநெல்வேலி – தாமிரசபை (செப்பு)
மதுரை – ரஜத சபை (வெள்ளி)


 “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், 

ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.

திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது.


வெள்ளி அம்பலம் ::
உள்பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள பாதையில் நுழைகிறோம். அதே வழியில் கடம்பத்தடி மண்டபமும், வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபமும் இருக்கிறது. இங்கு நடராஜர் சிலை ஒன்று உள்ளது. அவர் சபாபதி என்று அழைக்கப்படுகிறார். அந்தச் சிலை வெள்ளியினால் செய்யப்பட்டது. எனவே வெள்ளியில் அம்பலத்தான் இருக்கும் இடம் வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் சிவபெருமான் நடனம் புரியும் இடங்களில் மதுரை ஐந்தில் ஒன்றாகும். சுவாமி சன்னதியில் உள்ள நடராஜர் கருவரை, வெள்ளி சபை என்று அழைக்கப்படுகிறது. இது தவிற, சிதம்பரத்தில் கனகசபை, திருவாலங்காட்டில் ரத்னசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய இடங்கள் சிவனின் நடன சபைகளாகும்.




9429) பஞ்ச சபைகள் எவை?
ரத்தின சபை, கனகசபை, ரஜிதசபை, தாமிரா சபை, சித்திரசபை
9430) ரத்தின சபை எங்குள்ளது? திருவாலங்காடு
9431) கனகசபை எங்குள்ளது? சிதம்பரம்
9432) ரஜிதசபை எங்குள்ளது? மதுரை
9433) சித்திர சபை எங்குள்ளது? திருக்குற்றாலம்
9434) வெள்ளிசபை என்று அழைப்பது எந்த சபையை? ரஜித சபையை
9435) பஞ்ச தாண்டவங்களும் எவை?ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம்
9436) ஆனந்த தாண்டவ தலம் எது? சிதம்பரம் பேரூர்
9437) அஜபா தாண்டவ தலம் எது? திருவாரூர்
9438) சுந்தரத் தாண்டவம் தலம் எது? மதுரை
9439) ஊர்த்துவ தாண்டவ தலம் எது? அவிநாசி
9440) பிரம்ம தாண்டவ தலம் எது? திருமுருகன்பூண்.
9441) தில்லையில் உள்ள ஐந்து சபைகளும் எவை? சித்சபை, கனகசபை, தேவசபை, திருத்த சபை, ராஜசபை
9442) அருவம் என்பது என்ன? உருவமற்ற நிலை
9443) உருவம் என்பது என்ன? கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை
9444) அருவுருவம் என்பது என்ன? உருவமும் அருவமும் கலந்த நிலை
9445) அருவம், உருவம், அருவுருவம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக விளங்குவது எது? சிதம்பரம்
9446) உதயத்திற்கு முன் தினமும் நடைபெறும் பூஜை எது?நித்தியபூஜை
9447) விசேட கால பூஜை எது? நைமித்தி பூஜை



திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ நடராஜரைக் காணலாம்.

திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது.



வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப்
படுகிறது.இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத்
தாண்டவம் எனவும் அழைக்கப் படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்"








Thursday, March 21, 2013

தச நாடிகள்

தச நாடிகள்(10)
1. இடைகலை - (இடப்பக்க நரம்பு)
2. பிங்கலை - (வலப்பக்க நரம்பு)
3. சுமுழுனை - (நடுநரம்பு)
4. சிகுவை - (உள்நாக்கு நரம்பு)
5. புருடன் - (வலக்கண் நரம்பு)
6. காந்தாரி - (இடக்கண் நரம்பு)
7. அத்தி - ( வலச்செவி நரம்பு)
8. அலம்புடை - (இடச்செவி நரம்பு)
9. சங்கினி - (கருவாய் நரம்பு)
10. குகு - (மலவாய் நரம்பு)

Thursday, March 14, 2013

foot_soaking

http://www.sahajayoga.ca/Meditation/foot_soaking.htm


  • Meditate for 10 to 15 minutes.
  • You can say some affirmations to cleanse the chakras.
  • Rinse and dry your feet.
  • Flush the water down the toilet. Try not to look directly in the bucket before flushing.
  • Don’t use the foot-soak bucket for any other purpose. 
When the day is over (also anytime), relax by soaking your feet in salt water while meditating. This technique relieves the body of stress and allows for a peaceful and relaxed night's rest.Sit comfortably in a chair with your hands out on our lap, facing Shri Mataji’s photograph. Place your feet in a basin or bucket of luke warm water containing a handful of salt.

Friday, March 8, 2013

திருமந்திரத்தில் சன்மார்க்கம்


திருமந்திரத்தில்  சன்மார்க்கம் என்று ஒரு அதிகாரம் உள்ளது. அது சித்தர் மார்க்கம் என்றும் சொல்கிறது. அதில் இருந்து சில பாடல்கள். இந்த சன்மார்க்கத்தை நடத்துவது வள்ளல் பெருமான்.

ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத்தோர்க்குத்
தரும் முத்தி சார் பூட்டும் சன்மார்க்கந் தானே.

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவ மாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

சன்மார்க்க சாதனந்தான் ஞானம் ஞேயமாம்
பின் மார்க்க சாதனம் பேதையதாய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தான் அவனாகும் சன்மார்க்கமே.


சன்மார்க்கம் எய்த வரும் அருஞ்சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆன சன் மார்க்கமே.

மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம் சன்மார்க்க மெனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கம்  அது சித்த யோகமே.

கற்பூரவள்ளி



கற்பூரவள்ளி:-

வேறு பெயர்: ஓம வள்ளி


.
தாவர பெயர் Coleus Aromaticus.
Karpooravalli in Tamil
Pan-Ova in Marathi.
via http://www.facebook.com/aadhi.bagavan.1

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .

பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட ,கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்

Thursday, March 7, 2013

குருபூசைத் திருநாள்

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
"காரைக்கால் அம்மையார் குருபூசை"அம்மையாரின் ஒளி மலர் திருவடிகளைப் போற்றி வணங்கி, இறைவன் திருவருளைப் பெறுவோம்.

குருபூசைத் திருநாள் :
பங்குனி திங்கள், சுவாதி விண்மீன்.
"பேயார்க்கும்அடியேன்" 07.39.04
"அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு வண்டார்குழலி உடனுறை ஆலங்காட்டுஅப்பர் திருக்கோயில்,
திருஆலங்காடு.

சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் உள்ளன.
----------------------22/3/2013------------------------------------
இன்று வெள்ளிக்கிழமை "எம்பிரான் முனையடுவார் நாயனார் குருபூசை"

நாயனாரின் திருவடிகளைப் போற்றி வணங்கி, இறைவன் திருவருளைப் பெறுவோம்.

குருபூசைத் திருநாள் : பங்குனி திங்கள், பூசம் விண்மீன்.

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க்கு அடியேன்" 07.39.08 "அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்: 

"அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனுறை அருட்சோமநாதர் திருக்கோயில்", 

மயிலாடுதுறை வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம், 609203.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
---------------------------------mar 18 --------------------
"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று திங்கள்கிழமை "எம்பிரான் நேச நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் :
மாசி திங்கள், ரோகிணி விண்மீன்.

" வரிவளையால் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்" 07.39.11
"அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு கெம்பாம்பாள் உடனுறை சோமேசுவரர் திருக்கோயில்,
காம்பீலி,
பெல்லாரி மாவட்டம்.
கர்நாடகா.

*பெல்லாரி மாவட்டம் Hospet ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. Hospet - Hampi வழியாக KAMPLI (கம்பிலி)யை அடைய பேருந்துப் பாதையுள்ளது.

--------------------------------------------------------------------------------------------
7th march 2013
சிவாயநம"

"திருச்சிற்றம்பலம்"

இன்று வியாழக்கிழமை "எம்பிரான் காரி நாயனார் குருபூசை"

குருபூசைத் திருநாள் :

மாசி திங்கள், பூராடம் விண்மீன்.

" காரிக்கும் அடியேன்" 07.39.08

"அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்:

அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில்,
திருகடவூர்.
மயிலாடுதுறை.  

--------------------------------------------------------------------------------------------

28/feb/2013
"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வியாழக்கிழமை "எம்பிரான் எறிபத்த நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் :
மாசி திங்கள், அட்டம் விண்மீன். 
"இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்" 07.39.02
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில்,
கருவூர் [கரூர்] .



--------------------------------------------------------------------------------------------
11/feb/2013

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று திங்கள்கிழமை "எம்பிரான் அப்பூதி நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : தை திங்கள், சதயம் விண்மீன். 
"ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்" 07.39.04
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்,
திங்களூர் வழி,
திருபுவனம்,
திருவையாறு - 613 204.


----------------------------------
Feb 4 2013
"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று திங்கள்கிழமை "எம்பிரான் திருநீலகண்ட நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : தை திங்கள், விசாகம் விண்மீன். 
"திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன்" 07.39.01
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்: அருள்மிகு நடராசர் திருக்கோயில்.
கோயில் (சிதம்பரம், தில்லை)
கடலூர் மாவட்டம்.


---------------------------------------------.------------------------------------------------
jan 31 2013

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வியாழக்கிழமை "எம்பிரான் சண்டீச நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : தை திங்கள், உத்திரம் விண்மீன். 
"மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்"07.39.03
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்: அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில்,
திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)
- 612 504.
திருப்பனந்தாள் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

------------------------------------------------------------------------------------------------
jan 3 2013

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வியாழக்கிழமை "எம்பிரான் இயற்பகை நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : மார்கழி திங்கள், உத்திரம் விண்மீன். 
"இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்.
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு சாயவனேசுவரர் திருக்கோயில், 
திருச்சாய்க்காடு.

------------------------------------------------------------------------------------------------
Dec 22 2012

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று சனிக்கிழமை "எம்பிரான் வாயிலார் நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : மார்கழி திங்கள், ரேவதி விண்மீன். 
"தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" 07.39.08.06
அடியார்க்கும் அடியேன்.
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004.

------------------------------------------------------------------------------------------------
Dec 7 2012

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வெள்ளிக்கிழமை 
எம்பிரான் மெய்ப்பொருள் நாயனார் குருபூசை"
குருபூசை நாள் : கார்த்திகை திங்கள், உத்திரம் விண்மீன். 
"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்"
அடியார்க்கும் அடியேன்.
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவலூர்,
(திருக்கோயிலூர் - 605 757.)
விழுப்புரம் மாவட்டம்.

------------------------------------------------------------------------------------------------
Sept 14 2012
"திருச்சிற்றம்பலம்"
"இன்று வெள்ளிக்கிழமை திருஇளையான்குடிமாற
நாயனார் குருபூசை"
ஆவணி திங்கள்,மகம் விண்மீன். முத்தித் தலம்: இளையான்குடி.
"இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"

------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------

Monday, March 4, 2013

கடவுளை மட்டும் பேசி என்ன பயன்?

அன்புள்ள ஆன்மீகவாதியே கடவுளை மட்டும் பேசி என்ன பயன். முதலில் நீங்கள் யார் என்று தெரியுமா? உயிரின் சக்தியை சிந்தனை செய்தது உண்டா? உயிர் எங்கு இருந்து வந்தது? அதன் தன்மை என்ன? அதை ஏன் நம்மால் காண முடியவில்லை?. உயிரை கண்டால் மட்டுமே, நாம் வந்த இடத்துக்கு செல்ல முடியும். 

மனதை பண்படுத்தும் விஷயங்கள் உயிரை அறிய உதவாது. உயிரை காண உள்ள தடையை அழித்தால் மட்டுமே முடியும். நமக்கு இருக்கும் அறிவால் அதை செய்ய முடியுமா? எப்படி ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ஆசிரியரை கேட்கிறோமே? அது போலே உயிரை கண்டவர்களை அணுகி கேட்பது தானே முறை. அவர் தான் குரு. உயிரை கண்ட பிறகு தான் நான் யார் என்று தெரியும். பிறகு இறைவனை காண வேண்டும். 

உயிரை காண மனம் ஒரு தடை. மனம் கர்ம வினை/பாவ மூட்டை இருக்கும் வரை இயங்கும். தடையை நீக்க வேண்டும். மனத்தால் உயிரை அறிய முடியாது. உயிரை அறிய சும்மா இருக்க வேண்டும். மனதை சும்மா இருக்க செய்ய வேண்டும். மனம் சும்மா இருக்குமா? அதை திருவடியில் வைத்து சும்மா இருக்க வேண்டும் . திருவடியில் எவ்வளவு நேரம் சும்மா இருக்கும். திருவடியில் சும்மா இருக்க குருவிடம் திருவடி தீட்சை பெறுங்கள். இங்கு தான் குருவின் துணை தேவை.திருவடி தவம் செய்ய செய்ய உயிர் தரிசனம் கிடைக்கும். பிறகு இறைவன் தரிசனம். 
தீட்சை பெற http://sagakalvi.blogspot.in/2011/10/self-realization.html

பலியா?

“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.

“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்

பழமையான உணவு

சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.

நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.

இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார்.

இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.