Sunday, July 15, 2012

இராமதேவர் - பூஜாவிதி


ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1
போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்கவேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2
முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசையிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3
சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும்சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே.

Saturday, July 14, 2012

காலம் இனியில்லை


யாத்திரைப் பத்து


புகவே வேண்டா புலன்களில்நீர் !!
புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் 

மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்

விடுமின் வெகுளி வேட்கைநோய் 
மிகவோர் காலம் இனியில்லை 


அச்சப்பத்து 




 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்

வள்ளலார் கண்ணொளி பற்றி பாடிய பாடல்கள்

கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
கண்டு கலந்து களிக்கு மருந்து  -  நல்ல மருந்து 

ஏதம் அகற்றும் என் அரசே என் ஆருயிரே என்அறிவே
என்கண் ஒளியே என்பொருளே என் சற்குருவே என்தாயே  -
செல்வச் சீர்த்தி மாலை


கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே-
மகாதேவ மாலை 

கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே - .சற்குருமணி மாலை 



மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்க ஒளி மேவுகண்கள் - தெய்வமணி மாலை 



கண்ணே அக்கண்ணின் மணியே மணியில் கலந்தொளி செய்
விண்ணே வியன்ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
 பெண்ணே மலைபெறும் பெண்மணியே தெய்வப் பெண்ணமுதே
- வடிவுடை மாணிக்க மாலை 

கண்ணேஎன் இருகண் இலங்குமணியே என்உயிரே
என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே -- .திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்