Friday, March 8, 2013

திருமந்திரத்தில் சன்மார்க்கம்


திருமந்திரத்தில்  சன்மார்க்கம் என்று ஒரு அதிகாரம் உள்ளது. அது சித்தர் மார்க்கம் என்றும் சொல்கிறது. அதில் இருந்து சில பாடல்கள். இந்த சன்மார்க்கத்தை நடத்துவது வள்ளல் பெருமான்.

ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத்தோர்க்குத்
தரும் முத்தி சார் பூட்டும் சன்மார்க்கந் தானே.

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவ மாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

சன்மார்க்க சாதனந்தான் ஞானம் ஞேயமாம்
பின் மார்க்க சாதனம் பேதையதாய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தான் அவனாகும் சன்மார்க்கமே.


சன்மார்க்கம் எய்த வரும் அருஞ்சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆன சன் மார்க்கமே.

மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம் சன்மார்க்க மெனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கம்  அது சித்த யோகமே.

No comments:

Post a Comment