Friday, March 9, 2012

ஆன்மீக சுகந்திரம்


சரியை கிரியை யோகம் ஞானம் உள்ளது. ஒரு படியில் இருக்கும் ஒருவருக்கு மற்றவருக்கும் உள்ள கருத்துக்கு சண்டை. அதை சரியாக புரிந்து கொண்டால் ok. 

மந்திரங்கள் எல்லா பொய் எல்லாம் இல்லை என நம்புகிறேன். மனதை செம்மை படுத்த கண்டீப்பாக உதவும்.

நமது நாட்டில் ஆன்மீக சுகந்திரம் அதிகம். ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதுவே நம் நாட்டின் பலம். மற்ற நாட்டில் உள்ள கட்டு பாடு இங்கு இல்லை. இருந்திருந்தால் நமக்கும் ஒரே ஜீசஸ்/நபி தான் கிடைத்து இருப்பார். 

ஊருக்கு ஊர் ஜீவசமாதி பார்க்க முடிகிறது. சக்தி வாய்ந்த கோவில் பார்க்க முடிகிறது. படித்து மகிழ பல பாடல்கள். அதனால் விதி இருக்கும் என நான் நினைக்க வில்லை. 

சித்தர்கள் அடைந்த நிலை மிகவும் உயர்ந்தது. மரணமில்ல பேரு வாழ்வு அடைந்தவர்கள். 

வரலாறு பற்றி பேசி பயன் இல்லை என நினைகிறேன். இங்கே ஒத்த விருப்பம் உள்ளவர்கள் கூடி உள்ளோம்.

நாம் நம்மை அறிய மிக வேகமாக செயல் படவேண்டும். நம் குறிகோளில் இருந்து விலகாமல் இருக்க சித்தர்/ஞானி பாடல்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும். 

நல்ல தகுதி இருந்தால் சித்தர்கள் வழி காட்டுவார்கள். ஒரு கண்ணாடி எவ்வளவு சுத்தமாக உள்ளதோ அந்த அளவே அதனால் ஒளியை reflect பண்ண முடியும்.


வள்ளல் பெருமான் ஞான சரியை என்ற 13 படிக்கு நேரடியாய் அழைத்து செல்கிறார். சத்தியம் செய்து கெஞ்சி அழைக்கிறார். அவர் பெற்ற அந்த பெரும் பேரை அனைவரும் பெறவேண்டும் என கருணையுடன் அழைக்கிறார். அவர் கருணையோ கருணை...எந்த ஞானியும் இப்படி சொல்லவில்லை என நினைக்கிறன் .


ஞான சரியை --> http://sagakalvi.blogspot.in/2011/03/blog-post.html

போர் சண்டை கற்பழிப்பு சாதி பாகுபாடு உயிரை கொன்று தின்பது இது எல்லாம் மனிதனுக்கு பழகி விட்டது. இது எல்லாம் தவறு இல்லை. இது நமது இயல்பாகி விட்டது. எந்த திசையை நோக்கி இந்த உலகம் செல்கிறது. உலகத்தில் அனைவரும் தன்னை உணர்ந்து சந்தோசமாக இருந்தால் குற்றமா?  


நம்மை உடல் அல்லது மனம் என்ற நிலையில் அடையாள படுத்தி கொள்கிறோம். எவ்வளவு பொய்யான வாழ்க்கை வாழ்கிறோம். மனம் உடல் இது இரண்டும் நம்முடையது.

இதை நாம் என நம்பி வாழ்வை கழித்து, மற்றவர்களுடன் சண்டையிட்டு, சாதி பேதம் பார்த்து வாழ்கிறோம். இது சரி என படவில்லை. பொய்யை எதார்த்தம் என கருத என்னால் முடியவில்லை.
  


எல்லோரும் தன்னை உணர்ந்து வேலை செய்தால், பொறமை, கொலை .... இருக்காது . இங்கு அனைவரும் ஒன்று என்ற நிலை இருந்தால், யாரும் யர்ருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். சமுதாயம் இன்னும் நல்ல நிலையில் இருக்கும். என் குரு சிவசெல்வராஜ் அய்யா சொல்லி கொடுக்கும் தவம் "சும்மா இரு" என்பது தான். கண்ணில் உணர்வுடன் வேலை செய்து கொண்டு இருப்பது தான். நம்மை கெடுக்கும் டிவி நாடகம் கிரிக்கெட் ... தவிர்த்து .. நேரங்களை தவத்துக்கு உபயோக படுத்தலாம்.

இப்பொழுது இருக்கும் சூழ் நிலையில் நீங்கள் வெளியே சென்று கொண்டு இருக்கும் போது கஷ்டம் என்றால் உதவி செய்ய ஒரு சிலரே, உங்களிடம் இருந்து பறிக்க ஒரு கூட்டம் இருக்கும். தன்னை அறிந்த சமுதாயத்தில் இந்த பிரச்னை இருக்காது.
 

ஆசை காமம் .... எல்லாம் நாமுள் உள்ளது, நம்மை அறிய முற்படும் போது அதுவே தடை ஆகி விடும். தன்னை அறிய இஷ்டம் இல்லை என்றால் அதை சகஜம் என அப்படியே இருக்கே வேண்டியது ஆகி விடும்.அது இயல்பு என அதை பிடித்து கொண்டால், அதிலே கிடக்க வேண்டியது தான்.நான் சொல்வது தடைகளை கடந்து செல்வது பற்றி.

1 comment:

  1. சமுதாயத்தை பற்றிய உங்களது பார்வை மிகவும் நுட்பமாக, உண்மையாக இருக்கிறது. மனிதனுக்கு மனிதன் இறைநிலையை அடைவதற்கு உதவிக்கொள்ள வேண்டுமே தவிர நம்பகத்தன்மை இல்லாமல் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளக்கூடாது. இந்த புரிதல் தனி மனிதனில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கு தவம் ஒன்றே வழி. வள்ளல் பெருமான் போன்ற மகா சித்தர்களே துணை செய்ய முடியும். நன்றி அன்பரே .

    ReplyDelete