Thursday, March 29, 2012

கண்மணி!! வள்ளலார்







வள்ளல் பெருமான் கண்மணி/இறைவன் திருவடி பற்றி பாடிய பாடல்கள்


என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
என்ன தவஞ்செய் தேன்  



கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில்
கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே
விதிக்கும் உலகுயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே!!

 
கருணை நடத்தரசே என் கண்ணிலங்கு மணியே

 என்னிரு கண் காள்உமது பெருந்தவம் எப் புவனத்தில் யார்தான் செய்வர்

 கண்ணுத லானை என் கண்ணமர்ந் தானைக்

என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே

கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே

காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
காட்டுகின்ற ஒளி தனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்

கண்ணே கண் மணியே கண் ஒளியே கண்ணுட்
கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே

கண் செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே

கண்ணுண் மணியே என் உள்ளம் புனைஅணியே

வாழ்வித்த என் கண் மணியா மருந்து நல்ல ..
கண்ணொளி காட்டு மருந்து -

என்கண் மணியே என் வருத்தந் தவிர்க்க வரும்
குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே

எனது  கண்ணே என் இரு கண்  இலங்கு மணியே என் உயிரே
என்உயிர்க் குயிரே என் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே


என் ஆருயிர்க்கு வாழ்வே என் கண்
மணியே என் குருவேஎன் மருந்தே இன்னும்

மாற்றரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கு
ந்தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதியே நீ


வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே


மன்னிய பொன்னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
மாமணியே என்னிரு கண் வயங்கும் ஒளி மணியே
தன்னியல் பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே


கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே

என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
என்அனுபவந் தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
தானே கலந்துமுழுதும்

மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே

கண்மணி யே மணி கலந்த கண் ஒளியே

என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
கைக்கிசைந்த பொருளே என் கருத்திசைந்த கனிவே
கண்ணே என் கண்களுக்கே கலந்திசைந்த கணவா!!


கருணை நடஞ் செய்பவரே அணையவா ரீர்
கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்




கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி 

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து

சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.  
 5111     இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே.     46
5112     என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே.     -அம்பலத்தரசே


கண்ணுதலானை
என் கண் அமர்ந் தானைக்
கருணாநிதியைக் கறைமிடற் றானை
ஒண்ணுதலாள் உமை வாழ் இடத்தானை
ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
நண்ணுதல் யார்க்கும் அருமையி னானை
நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.

No comments:

Post a Comment